நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

சின்னத்திரை டிவி நடிகைகளின் சில்மிஷங்கள்


சின்னத்திரை டிவி நடிகைகளின் சில்மிஷங்கள்

‘‘கடந்த டிசம்பர் மாதம் கடைசி நாளன்று, கிழக்கு கடற்கரைச் சாலையில் எங்கள் டீம் ரெய்டு நடத்தியது. அப்போது அங்குள்ள காட்டேஜ்களில் அரைகுறை ஆடைகளுடன் மதுக் கோப்பையும் கையுமாக இருந்த பல இளம் பெண்கள் சிக்கினார்கள். அதில் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள், சின்னத்திரை நடிகைகளாக இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றிய எங்கள் டீம், கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த வேன் கமிஷனர் அலுவலகம் வருவதற்குள், மத்திய அமைச்சரின் பி.ஏ. முதல் லோக்கல் மாவட்டச் செயலாளர் வரை பல தரப்பினரும் இந்தச் சின்னத்திரை நடிகைகள் மீது புகார் எதுவும் பதியாமல் விட்டுவிடும்படி போனில் வற்புறுத்தினார்கள். பிடிபட்ட ஒவ்வொரு நடிகைக்கும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசியல் பிரபலம் வக்காலத்து வாங்கிப் பேசியதில், எங்கள் மேலதிகாரிகளே மிரண்டு போய், அந்த நடிகைகளை அனுப்பிவிடச் சொல்லிவிட்டார்கள்! அத்தனை ஏன்? ஒரு நடிகையின் சார்பாக சென்னை நகர இணை கமிஷனர் ஒருவரே பேசினார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார் நம்மிடம் பேசிய விபசாரத் தடுப்புப் பிரிவு அதிகாரியருவர்.

ஆச்சரியத்துடன் அதைக் கேட்டுக் கொண்ட நாம், அதிகாரி சொன்ன தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சின்னத்திரை வட்டாரத்திற்குள் புகுந்து ஒரு ரவுண்ட் அடித்தோம். அங்குள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்ன தகவல்களைக் கேட்டு, நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
சின்னத்திரையில் பல காலமாக ஒளிப்பதிவாளராக இருக்கும் ஒருவர், ‘‘டி.வி.யில் நடிப்பதற்கென்று வரும் பெண்கள் எதற்கும் தயாராகத்தான் இருக்கிறார்கள். அதே சமயம், இவர்கள் அடிப்படையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், பணத்தைக் காட்டி அவர்களை ஏமாற்ற முடியாது. என்றாலும், எங்களைப் போன்ற சீஃப் டெக்னீஷியன்களில் சிலர் செய்யும் சில்மிஷங்களை, அவர்களால் தடுக்கவும் முடியாது!’’ என்று பேச ஆரம்பித்தார்.
‘‘புதுமுகப் பெண்களை நாங்கள் மடக்கும் பாணியே அலாதியானது. அந்தப் பெண்ணை எந்தக் கோணத்தில் எடுத்தால் அழகாக இருக்குமோ, அந்தக் கோணத்தில் எடுக்காமல் ஒட்டுமொத்த யூனிட்டையே அப்செட்டில் ஆழ்த்திவிடுவோம். இந்தப் பெண் தேறாது என்ற பேச்சை உருவாக்கி விட்டு பிரேக் விடுவோம். அந்த நேரத்தில் மேக்கப் ரூம் போயிருக்கும் அந்தப் பெண்ணிடம் எங்களின் உதவியாளர் போய், ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டால் அழகாகப் படம் பிடிப்போம்’ என்பார். அந்தப் பெண் அதைப் புரிந்துகொண்டு சம்மதித்து விடுவார். இது பொதுவான யுக்திதான்’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி நம்மை அதிரவைத்தார் அவர்.
பிரபலமான சின்னத்திரை இயக்குநர் ஒருவரிடம் பேசிய போது, ‘‘ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் தொழில் ரீதியாக மட்டுமே பேசிவிட்டு, ரிலாக்ஸாக இருக்கும்போது, ‘இன்று ஒரு பார்ட்டி இருக்கிறது. வருகிறாயா?’ என்று கேட்போம். பெரும்பாலான பெண்கள் அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு கம்பெனி கொடுப்பது வழக்கம். புரியாமல் முரண்டு பிடிக்கும் பெண்களின் கேரக்டரை தொடரில் மட்டுமின்றி, நிஜத்திலும் டேமேஜ் பண்ணி டம்மி ஆக்கிவிடுவோம்!’’ என்று அலட்டாமல் சொன்னார்.
ராஜ உபசாரம், கை நிறையச் சம்பளம், அபரிமிதமான விளம்பரம் என்று சகல விதத்திலும் போதையூட்டும் ஒரு மீடியா சின்னத்திரை. அதில் நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் கொஞ்சம் தடம் மாறித்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
‘‘ஒரு தொடரில் கண்ணியமான கணவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஒரு நடிகர். அது ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோதெல்லாம், ஒரு பெண் அவர் மொபைலில் தொடர்ந்து பேசுவார். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் அவரை நேரில் சந்திக்க விரும்பி, தன் வீட்டிற்கு வரச் சொன்னார். அவரும் கொஞ்சம் தயக்கத்துடன் அங்கு போனார். போன இடத்தில் அந்தப் பெண்ணின் பின்னணியைத் தெரிந்து பரிதாபப்பட ஆரம்பித்தார். கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு, கணவரால் சுகம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அவரைக் கட்டிப் பிடித்து அழுத அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். பிறகு, அவரே அந்தப் பெண்ணுக்குக் கள்ளப் புருஷன் ஆகிவிட்டார்!’’ என்றவர், ‘‘அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், மேலும் சிலருக்கும் அவர்தான் இப்போது சுந்தர புருஷன்’’ என்று தனது இயக்கத்தில் நடித்து வரும் ஒரு நடிகரைப் பற்றிய பின்னணியை விளக்கினார் ஓர் இயக்குநர்.
சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘‘இப்போதெல்லாம் டி.வி.க்கு வந்திருப்பவர்கள் நடிக்கத் தெரிந்தவர்களாக மட்டுமல்ல, வாழவும் தெரிந்தவர்களாக _ வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்’’ என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார்.
‘‘ஒரு டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஜோடி’களின் ஆட்டத் தொடரைப் பார்த்தீர்களா? அதில் ஜோடிகள் இஷ்டத்துக்கு மாறி மாறி ஆடிவிட்டு இஷ்டத்துக்கு முத்தம் கொடுப்பதையும் பார்த்தீர்களா? அந்த ஜோடிகள் ரிகர்சல் என்ற பெயரில் நடத்திய கூத்துக்களையும், சில்மிஷங்களையும் கூட படம் பிடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்தால் அந்த ஜோடிகளே அவமானத்தில் கூனிக் குறுகிப் போவார்கள். இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டானதால், இதன் தொடர்ச்சியாக வேறொரு பெயரில் இரண்டாம் பாகமாகத் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை விட, அதில் பல காட்சிகள் இடம் பெறப் போவதாகச் சொல்கிறார்கள். இந்த ரிகர்சலில் இன்னும் என்னென்ன கூத்துக்களை அரங்கேற்றக் காத்திருக்கிறார்களோ? தாங்கள் செய்வது இன்னதென்றே தெரியாமல் செய்யும் அவர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை!’’ என்றார் வேதனையுடன்.
ஆளாளுக்கு இப்படிச் சொன்னாலும் ‘வாய்ப்பு பறிபோனாலும் பரவாயில்லை. உங்கள் இஷ்டத்திற்கு நான் உட்பட மாட்டேன்’ என்று அடம் பிடிக்கும் நடிகைகளும் சின்னத் திரையில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பல வெற்றித்தொடர்களை இயக்கிய ஒருவர், தனது தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகையும் தனது இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பாராம். அதற்குச் சம்மதம் தெரிவிக்கும் பெண்களுக்கே கதையில் முக்கியத்துவம் கொடுப்பாராம். ஃபீல்டில் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இவரின் கேரக்டர் தெரியும். இந்த நிலையில், இவருடைய புதிய தொடரில், பெரிய திரையில் அறிமுகமாகிப் பிரபலமான, வாசமுள்ள பெயர் கொண்ட நடிகை அறிமுகமானார். அந்த நடிகையையும் இந்த இயக்குநர் வழக்கம்போல மடக்கிப்போட முயல… நடிகை மறுப்புச் சொன்னதோடு, ‘முடிந்தால் தொடரில் இருந்து என்னைத் தூக்கி விடுங்கள்’ என்றும் கூலாகச் சொல்லிவிட்டார். இதில் இயக்குநருக்கு ஷாக்தான்.
இவரை மாதிரியே இந்தத் துறையில் பலரும் இருப்பதாகத் தெரிவித்த ஒரு நடிகை, ‘‘டி.வி.யில் நடிப்பவளை சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் மட்டுமல்ல, அரசியல் பிரபலங்கள் அழைப்பதும் சகஜம். தமிழக அரசியல் வி.ஐ.பி. ஒருவர் கடந்த சில வருடங்களாக வாரந்தோறும் சின்னத்திரை நடிகைகளுக்கெனவே ஒரு காக்டெயில் பார்ட்டி வைப்பது வாடிக்கை. அவருடைய பொருளாதார உதவியுடன் பல தொடர்கள் இங்கு தயாராகி வருவதால், கிட்டத்தட்ட எல்லா நடிகைகளும் அவர் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம். பார்ட்டிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
அதுபோல், இன்னொரு அரசியல் வி.ஐ.பி., மாதமொரு முறை டிஸ்கொதே நடத்துவது வழக்கம். அதில் கலந்து கொள்ள பல தொழிலதிபர்கள் வருவதால் நாங்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வோம். அந்த பார்ட்டி முடிந்து திரும்பும்போது ஒவ்வொரு நடிகைக்கும் இரண்டு, மூன்று பவுன் தங்கச்சங்கிலி பரிசாகக் கிடைக்கும்’’ என்று பல விஷயங்களைச் சொல்லிவிட்டு, ‘‘இது போன்ற பெரிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை ஏன் இழக்கவேண்டும்? அது மட்டுமின்றி இப்படி ஃப்ரீயாகப் போய் வருவதன் மூலம் தான் எக்கச்சக்கமான வாய்ப்பும் கிடைக்கிறது. அதை ஏன் இழக்க வேண்டும்’’ என்று யதார்த்த நிலையை விளக்கினார் அந்த நடிகை.
‘‘மாடலிங் பெண்களைப் போல எங்களுக்கும் சில நட்சத்திர ஓட்டல்களில் பீர் மற்றும் சிற்றுண்டிகள் இலவசம்தான். அங்கு இதுபோன்ற சில விஷயங்கள் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக நாங்கள் எதையும் இலவசமாகக் கொடுப்பதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போது வாழ்க்கையை அனுபவிப்பதுடன் அதிகபட்சம் சம்பாதிப்பதும் முக்கியம் இல்லையா?’’ என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்புகிறார் இன்னொரு சின்னத்திரை நடிகை.