நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

டிவி நடிகைகளா ப்ளூ ஃபில்ம் டிவிடி நடிகைகளா ? அசத்தும் சின்னத்திரை விபச்சாரம்

ஒரு சீனியர் நடிகைதான் நடிகைகளின் மீடியேட்டராகச் செயல்பட்டு வருகிறார். அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் யாராவது பணக்காரரின் தயவில் ஒரு காக்டெயில் பார்ட்டி ஏற்பாடு செய்து விடுவார். அதில் கலந்து கொண்டாலே கூச்சமெல்லாம் குறைந்து விடும். அந்தளவுக்கு பார்ட்டியில் ஆபாசம் தலைவிரித்தாடுமாம்!
அதுமட்டுமின்றி, ‘இந்த மீடியாவில் பிரபலமான இரண்டு நடிகைகளின் லெஸ்பியன் விளையாட்டும் ஒவ்வொரு பார்ட்டியின்போதும் பகிரங்கமாக நடக்கும்!’ என்றும் சொல்லி நம்மைத் திடுக்கிட வைத்தார், நீண்ட காலம் சின்னத் திரையில் வலம் வரும் நடிகை ஒருவர்.

இதுபோன்று நடக்கும் பல பார்ட்டிகளில் கலந்துகொண்ட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, ‘‘பார்ட்டியில் கலந்துகொள்ள வரும் நடிகைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பழகுகிறார்கள். நான்கெழுத்து மூத்த நடிகையருவர், தான் சந்திக்கும் பிரபலங்களிடம் கேஷ§வலாக, ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கடனாகக் கொடுங்கள் என்று கேட்பார். ஒரே பார்ட்டியில் நாலைந்து ஆட்களிடம் எதையாவது சொல்லி ஒவ்வொருவரிடமும் பத்தாயிரம் ரூபாய் வாங்கி விடுவார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, ‘என்கிட்டே கேட்கறதுக்கு எவ்வளவோ இருக்கும்போது பணத்தைக் கேட்கலாமா?’ என்று சொல்லி அடுத்த கட்டமாக நேரடியாகவே ‘காட்டேஜ் ஏதாவது போய் வரலாமா?’ என்றும் கேட்டு விடுவார்.
உயரமான இரண்டெழுத்து நடிகையருவர் பேசிக் கொண்டிருக்கும்போது நம்மிடம் கேஷ§வலாக, ‘உங்களுக்கு வலது தொடையில் மச்சமிருக்கிறதா? எனக்கு அங்கே இருக்கிறது’ என்பார். அதிர்ந்து போய் நாம் பார்க்கும்போது, ‘வாருங்களேன். அதை செக் பண்ணிப் பார்ப்போம்!’ என்பார்.
பெரிய கண்ணழகி நடிகையருவர், நம்மிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கிவிட்டு தாங்க்ஸ் சொல்லி விட்டுச் சென்ற சிறிது நேரத்திற்குள், பலான வாசகங்களுடன் கூடிய எஸ்.எம்.எஸ். செய்திகளை அடுத்தடுத்து அனுப்புவார்.
ஒட்டுமொத்த ஃபீல்டிலேயே உயரம் குறைந்த அந்த நடிகை, பார்ட்டிக்கு வந்திருப்பவர்கள் போட்டிருக்கும் மைனர் செயினின் கனத்தைப் பொறுத்து ஒவ்வொருவர் அருகிலும் உட்கார்ந்து கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். அவரது மானரிஸமாம் அது!’’ என்று விலாவாரியாகச் சொன்னதைக் கேட்டு நம்மால் முகத்தைச் சுளிக்கத்தான் முடிந்தது.
இப்படி பலதரப்பினரும் பல்வேறு தகவல்களைக் கூறிய நிலையில், இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள சின்னத்திரையின் பிரபல நடிகையான பிருந்தா தாஸைச் சந்தித்துப் பேசினோம்.
அவர், ‘‘இப்போதைய சூழ்நிலையில் இந்தச் சின்னத்திரை ஆரோக்கியமான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. படித்தவர்கள் பலரும் இப்போது பங்கெடுத்து வருவதால் போட்டியும், பொறாமையும் அதிகமாக இருக்கிறது.
அதே சமயம், சின்னத்திரைக்கு வரும் பெண்கள் நடிக்க மட்டும்தான் வந்திருக்கிறோம் என்பதையும், இஷ்டப்படி வாழ்வதற்கு அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்திருக்கிறார்கள். இதில் நடித்துக் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றும் பெண்கள் மிகவும் குறைவு. அதனால், பணத்திற்காக தவறான பாதையில் போகும் பெண்களும் குறைவு.
மற்ற தொழிலில் ஈடுபடும் பெண்களுக்குரிய ஆசாபாசங்கள் எங்களுக்கும் உண்டு. சின்னத்திரை நடிகைகளான நாங்களும் எங்களுக்குள் பிறந்த நாள், திருமண நாள் நிகழ்ச்சிகளென்று பார்ட்டி வைத்துக் கொண்டாடுவோம். எங்கள் ‘ஆனந்தம்’ சீரியல் யூனிட்டிற்கு நான்தான் கோ_ஆர்டினேட்டராகச் செயல்படுகிறேன். இதில் ஒன்றும் தப்பில்லையே!
அதே சமயம், எனக்கும் எங்கள் யூனிட்ச் பெண்களுக்கும் மற்ற ஆண்களுடன் பேசிப் பழகுவதில் நாகரிகத்தையும் ஓர் எல்லையையும் கடைப்பிடிப்போம். அப்படியிருந்தும் எங்களைப் பற்றி தப்புத்தப்பாகச் செய்திகள் வருவது வருத்தத்தையே தருகிறது. எங்கள் சின்னத்திரை வாழ்க்கையும் ஸ்போர்ட்ஸ் மற்றும் மாடலிங் துறையினரின் வாழ்க்கையும் திறந்தவெளி அரங்கில் நடப்பதால், சில சிக்கல்களும் அசௌகரியங்களும் இருக்கின்றன.
இந்தத் துறையிலுள்ளவர்கள் தப்புச் செய்தாலும் தவறிப் போனாலும் ஒட்டுமொத்த மீடியாவுக்கும் தெரிந்து விடும். அப்படியிருக்கும்போது யாரும் பாதை மாறிப் போக மாட்டார்கள் என்பதை நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள் இங்கு சகஜமான விஷயம். அது இங்கே மட்டும் நடக்கிற ஒரு விஷயமில்லையே?’’ என்றார்.
‘‘எங்கள் துறையின் இளைய தலைமுறை இஷ்டத்துக்கு ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள் தான். அதைத் தப்பு என்று அவர்களே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்களுக்கும் வேதனையாக இருக்கிறது.
சின்னத்திரையின் பிரபலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாதை மாறி பணத்திற்காக எதையும் செய்யும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பெண்கள் சின்னத்திரையில் மட்டும்தானா இருக்கிறார்கள்?
ஆனாலும் இவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்தி சின்னத்திரையை ஆரோக்கியமாக்கிக் காட்டுவதே எங்கள் லட்சியம்!’’ என்றார் சின்னத்திரை கலைஞர்கள் சங்கத் தலைவரான வசந்த்.
அவர் சொன்னபடி சின்னத்திரை கலாசாரம் நேர்வழியில் பயணப்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும், ஆதங்கமும்!