நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

nadigai hindi actress scandal news illicit love


‘நாட்டாமையும், மும்பை மொசக் குட்டியான “நக்’’நடி கையும் காதல் வயப் பட்டு, அதன்பின் இரு வருக்கும் இடையே பிரச் சினை வந்தபோது, நாட்டா மை தன் அதிகாரத்தை பயன் படுத்தி மிரட்ட… நடிகையோ, அப்போதைய சூரிய ஆட்சியா ளர்களின் உதவியை நாட… போலீஸ் துணையோடு ஏர்போர்ட் சென்று மும் பைக்குப் போனார் நடிகை. அதன்பின் அவர் கோலிவுட் பக்கமே வரவில்லை. மறுபடி அவர் சென்னை வந்தது… தன் தங்கை நடிகையின் திருமணத் திற்குத்தான்!
இதேபோலத்தான் இந்த “தம’ நடிகை யும் சென்னையை விட்டே பேக்-அப் செய் யப்பட்டார். ஆனால் மிரட்டலோ, அதிகார பலமோ காட்டாமல், புத்திசாலித்தனமாக பேக்-அப் செய்து அனுப்பினார்கள்.
ஏன்? எதற்கு? எப்படி?
விஜய், சூர்யா, தனுஷ்… இப்படி பெரிய ஹீரோக்களுடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை தந்து கொண்டிருந்தவர் “தம’ நடிகை. இந்த சமயம் டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் ‘”காட்டன் வீரன்’’ ஹீரோவாக வும், நயன்தாரா நாயகியாகவும் பேசப்பட்டு “லடுக்கா’’படம் தொடங்கப்பட்டது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே நயன் அந்தப் படத் திலிருந்து விலகிக்கொள்ள….  தளதளனு இருந்த ‘”தம’’நடிகை இந்தப் பைய னுக்கு ஜோடிப் பொண்ணாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே நடித்த இரண்டு படங்களிலும் அழுக்கான கேரக் டர்களிலேயே வந்த ‘வீரன்’ இந் தப் படத்தில் அழகான இளமை ததும்பும் ஹீரோவாக வந்தார். இதனால் காதல் காட்சிகளில் ரொம்பவே ரொமான்ஸ் காட்டி நடித்தார். ஆகவே ஆன் த ஸ்கி ரீனில் வெளிப்பட்ட இந்த ஜோடியின் காதல் கெமிஸ்ட்ரி, ஆஃப் த ஸ்கிரீனிலும் வெளிப் பட்டது. படம் பார்த்த ரசிகர் களும் இந்த ஜோடிப் பொருத் தத்தை சிலாகிக்க ஆரம்பித்து விட்டனர். ‘தம’நடிகை குறித்து மீடியாக்கள் வீரனிடம் கேட்ட போது… ரொம்பவே யோசித்து வார்த்தைகளை தேடிப்பிடித்துச் சொன்னார்… “அழகிய இளவரசி.’’
இதன்பின் அடுத்த படத்தில் வேறு நாயகியோடு நடித் தாலும்கூட… இவர்களின் பழக்கம் தொடர்ந்துகொண்டி ருந்தது. தம’நடிகையும், தான் தங்கியிருந்த க்ரீன் பார்க் ஹோட்டலின் மொட்டை மாடியிலுள்ள நீச்சல் குள ரெஸ்ட்ராரெண்ட்டில் தன் காதல் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கலர் கலராய் கனவுகள் கண்டுகொண்டிருந்தார்.
மறுபடி புலிகளில் ஒரு வகை மிருகம் பேரில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான வீரன், தம’ நடிகையையே ஜோடியாக ஒப்பந்தம் செய்யச் சொன்னார். இதிலும் இவர்களின் லவ் ரொமான்ஸ் மிகப் பிரமாதமாக வெளிப்பட்டது.
இப்போதுதான் ஹீரோ வீட் டில் சந்தேகம் வர ஆரம்பித்தது.
ஹீரோ வீட்டில் ஏற் கனவே முதல் வாரிசு தங்கள் பேச்சை மீறி மும்பை நடிகை யை மணந்தது போல… சின்ன வாரிசும் செய்துவிடக்கூடாது’ என எண்ணிய ஹீரோவின் குடும்பத்தலைவர்… தனக்கு நெருக்கமான சினிமா ஆட்களிடம் விசாரித்தபோது… இருவருக்கும் இடையே ஒரு “இது’ இருப்பது அரசல்புரசலாக தெரிய வந்தது. இந்த மருமகளாவது சொந்த இன மருமகளாக இருக்கவேண்டும் என முடிவெடுத்து பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கினார்கள்.
அத்துடன்… ‘”வேற ஏதாவது நினைப்பு இருந்தா… அந்த நினைப்பை அழிச்சிடு’’ எனவும் ஹீரோவை எச்சரித்தார் குடும்பத் தலைவர். அதன்பிறகுதான் நடிகையை பேக்-அப் பண்ணி ஊருக்கு அனுப்பும் வேலை தொடங்கியது.
சிறுத்தையாக சீறி அந்தப் படம் வெற்றியை குவிக்க… நடிகையைத் தேடி புதிய பட வாய்ப்புகள் வந்தன. இந்த நடிகையுடன் ஏற்கனவே ஜோடியாக நடித்திருந்த தனுஷும் புதிய படம் ஒன்றிற்காக தம’நடிகையின் கால்ஷீட்டைக் கேட்டார்.
ஆனால்… ‘”மேடம் பிஸி’’ எனச் சொல்லியே நடிகைக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் தட்டிக் கழித்தார் நடிகையின் “கோல்டு’’ மேனேஜர். இந்த கோல்டுதான் வீரன் ஹீரோவுக்கும், அவரின் அண்ணனுக்கும் மேனேஜர்.
“வீரன் வீட்டார் சொன்னபடி செய்யாவிட்டால் இந்த பிரதர்ஸுக்கு மேனேஜராக இருக்க முடியாது’ என்பதால்…  நடிகையை தேடிவந்த வாய்ப்புகளை திசை திருப்பிவிட்டார் கோல்டு.
திருமணம் முடிகிறவரை நடிகை தமிழ்நாட்டிலேயே இருக்கக்கூடாது… என உத்தரவு வந்ததால் சில தெலுங்குப் படங்களைப் பேசி ஆந்திராவுக்கு பார்சல் செய்தார் கோல்டு.
வீரனின் கல்யாணப் பத்திரிகை கூட நடிகைக்கு தரப்படவில்லை.
இந்த விவகாரமெல்லாம் தாமதமாகத்தான் நடிகைக்கு தெரிய வந்தது. “விருப்பமில்லையென்றால் சொல்லிவிடலாமே… என் பிழைப்பை ஏன் கெடுக்க வேண்டும்?’’ என மன வேதனைப்பட்டார் நடிகை. கூடவே இருந்து வாய்ப்புகளைக் கெடுத்த மேனேஜர் கோல்டுவையும் நீக்கிவிட்டார்.
‘”இனி தமிழ் சினிமாவே வேண்டாம்’’-என முடிவெடுத்துவிட்டு தெலுங்கில் நிறைய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இப்போது… அடுத்த தெலுங்குப் படம் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருப்பதால் ஒரு மாதத்திற்கு நடிகையின் கால்ஷீட் ஃபிரியாக இருக்க… இதைத் தெரிந்துகொண்ட கோலிவுட் ஆட்கள்… “ஒரு மாசம் ஃபிரியாத்தான இருக்கீங்க. இருபது நாள் கால்ஷீட் குடுங்க, படத்தை முடிச்சிடுறோம்’’ என கேட்டபோதும்…. “சும்மா இருந்தாலும் இருப்பே னே தவிர… சென்னைப் பக்கம் வரமாட்டேன்’’எனச் சொல்லிவிட்டார்.
இந்த ஒருமாத காலத்தைக் கழிக்க சுவிட்ஸர்லாந்து போயிருக் கிறார் நடிகை. “ஷூட்டிங்… ஷூட்டிங்’ என பிஸியாக இருந்த நடிகை, நிறுத்தி நிதானமாக தன் காதல் நினைவுகளை அந்நிய மண்ணில் அசைபோட்டுப் பார்ப்பாரோ?
குறிப்பு : இது யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.