நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

குடும்ப பெண் வைத்து விபச்சாரம் செய்த நடிகை



ஹைதராபாத் நகரில் தன்னிடம் வேலை கேட்டு வந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தெலுங்கு நடிகை தாரா என்று அழைக்கப்படும் தாரா செளத்ரி  பஞ்சரா ஹில்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குண்டூரை சார்ந்தவரான தாரா தெலுங்கில் 'பிரிய சகி', 'லவ் டிக்கெட்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் தன்னிடம் வேலை தேடி வரும் பெண்களிடம் அவர்களின் சீவிக்களை வாங்கி கொள்வது வழக்கம். பின்பு ஒரு சில நாட்கள் கழித்து அப்பெண்களை அழைத்து இப்போதுள்ள நிலையில் விபசாரம் செய்வது தான் பணம் சம்பாதிக்க வழி எனும் வகையில் அவர்களை மூளைச் சலவை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம். அதில் திறமையாக இருப்பவர்களை தாரா ஊக்குவித்து தனியே விபசார விடுதிகளும் ஏற்படுத்த தாரா உதவி செய்தார்.

அப்படி வேலை கேட்டு சென்ற பெண்ணிடம் தாரா நடந்து  கொள்ளவே அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்ய முன் வந்த தலைமை காவலர் நாகேஸ்வர் ராவிடம் தன் செல்வாக்கை சொல்லி கைது செய்ய விடாமல் தடுக்க, அரசு ஊழியரை பணியாற்ற விடாமல் தடுத்ததாக இன்னொரு வழக்கிலும் காவல்துறை அவரை கைது செய்தது.