நடிகை கதை உங்கள் மெயிலில்

Enter your email address:

Delivered by FeedBurner

நடிகை கதை - ரெயிடில் எஸ்கேப்பான நடிகை



சென்னையில் வளர்ந்தவர்தான் இரண்டெழுத்து “சு’’நடிகை. என்றாலும் அடிப்படை ஆந்திரா. மப்பும் மந்தாரமுமாக இருந்த அவரின் அழகில் மயங்கிப்போனார் பக்கத்து வீட்டில் வசித்த  சினிமா ஒப்பனைக் கலைஞர் ஒருவர்.
‘”வெண்ணெய்யைக்  கைல வச்சுக்கிட்டு எண்ணெய்க் காக ஏங்கிக்கிட்டு இருக்கீங் களே? நீங்க மனசு வச்சா ஒங்க குடும்ப கஷ்டம் தீரும்’’என்றபடி அர்த்த புஷ்டியோடு அந்த அழகுப்பெண்ணான “சு’வைப் பார்த்தார் ஒப்பனை.
“ஓகே. சினிமாவில் இறங்க நான் ரெடி’’என அந்த “சு’ பெண்ணும் சம்மதித்தார்.
அழைத்தவர் ஒப்ப னைக் கலைஞராக இருந்தாலும் ஒப்பனை போட்டு மறைக்கா மல் ஒரு உண்மை யைச் சொன்னார்.
‘”அதுக்கெல்லாம் உடன்படணும். அதுக்கு முன்னாடி எனக்கும் உடன்படணும்’’ என உடன்படிக்கை போட்டார்.
மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்தார்.ஒரு புதுமுக நடிகர் இயக்கி நடித்த பள்ளி இறுதி வகுப்பைக் குறிக்கும்’ படம் மூலம் நடிகையாக அறிமுக மானார்.
ஆனால் அந்தப்படம் தோல்விப் படமானதால் நடிகைக்கு வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பானது. இந்தச் சமயம் ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டது நடிகைக்கு. சினிமாவை விட்டுவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் நடிகையின் அக்கா காதல் தோல்வி ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் தன் காதலையும் துறந்த நடிகை குடும்பத்திற்கு உழைப்பது மட்டுமே குறிக்கோள் என முடிவு செய்தார்.
அப்போது “தகடு தகடு’ ஆக்டரை வைத்து ‘சவுண்டான’ படம் எடுத்த டைரக்டருடன் பழக்கம் ஏற்பட்டது. டைரக்டருக்கே படம் இல்லாத நிலை. இருந்தாலும் வெளித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இன்னொரு புறம் சினிமா வாய்ப்பு வேட்டைகளிலும் இறங் கினார்.
கதை நாயகி வாய்ப்பை விட, கவர்ச்சி நாயகி வாய்ப்பு ஈஸி. குத்துப்பாட்டு ஆடும் நடிகைகளுக்கு டிமாண்ட்டும் உண்டு. அதனால் அந்த ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அர்ஜுனரை வைத்து வெங்கடம் இயக்கிய ‘”ஆசிரியர்’’ படம் மூலம் தன் குத்தாட்ட நடிப்பை ஆரம்பித்தார்.
ரீ-மிக்ஸ் பாடலான “முனியம்மா’ பாட்டுக்கு நடிகை போட்ட ஆட்டம் ஹிட்டாகி பரவலான வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. பணக்கார இளசுகளின் பார்வையும் நடிகை மீது விழுந்தது. இதில் பழக்கமான ஒரு இளைஞர் தன் நண்பர்களிடமும் இதுபற்றிச் சொல்ல….
ஒருநாள் காதலர் தினத்தன்று இரண்டு பேர் நடிகையிடம் புரோக்ராம் போட்டார்கள். ஏடாகூட விவகாரங்களுக்கு பேர்போன கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சவுக்குத் தோப்புதான் லொகேஷன்.
காருக்குள் சரக்கடித்து விட்டு சல்லாபத்தில் இருக்க… நடிகை குலைநடுங்கிப் போகிற அளவிற்கு அங்கே ஒரு வில்லங் கம் தொடங்கியது.
காருக்குள் சரக்கும், சல்லாபமு மாக இருக்க… திடீரென அந்த இடத்தை ஐந்தாறு முரட்டு ஆசாமிகள் சூழ்ந்துகொண்டனர்.”சு’’நடிகையுடன் வந்த இரண்டு இளைஞர்களையும் தாக்கிவிட்டு நடிகையை பலவந்தமாக காருக்குள் இருந்து வெளியே இழுத்து கடத்திக் கொண்டு போக திட்ட மிட்டனர்.
நடிகையுடன் வந்தவர்கள் அதைத் தடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். இந்த அதிரடி யில் நடுநடுங் கிப்போன நடிகை, பலம் கொண்ட மட்டும் அவர்களை எதிர்த்துப் போராட….
யதேச்சையாக அந்தப் பகுதியில் போலீஸார் ரெய்டு வர… முரட்டுக் கும்பல் தப்பி ஓடியது. நடிகையும் அவருடன் வந்தவர் களும்கூட போலீஸில் சிக்காமல் எஸ்கேப் ஆனார்கள்.
தனக்கு நெருக்கமான ஒருசில நிருபர் களிடம் மனம்விட்டுப் பேசுவது “சு’’வின் வழக்கம்.”சினிமா ஃபீல்டுக்கு வந்திட்டா அப்படி இப்படித்தான் இருக்கமுடியும். நான் உத்தமினு சொல்லிக்க விரும்பல’’என்பது அவர் உதிர்க்கும் தத்துவமாகும்.
குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.